மேல், ``அண்ட முதலான்`` எனக் குறிக்கப்பட்ட, அனைத்துலகிற்கும் முதல்வனாகிய சிவபெருமான், முன்னாளில், மேல்நிலையினின்றும் இறங்கி, என் வினைக்கேற்ற வகைகளாகத் தனது உண்மை நிலையை மாற்றிக்கொண்டு, கீழ்நிலையில் நின்ற தனது சத்தியை எனக்குப் பெருங்காவலாக அமைத்து நடாத்தித் தனது ஒப்பற்ற தனிப் பேரின்பத்தைத் தரும் அருள் நோக்கத்தை இன்று எனக்கு அளித்து, என் உள்ளத்தில் நீங்காது நின்று, அதனை அன்பி னால் கசிந்து கசிந்து உருகப்பண்ணி, எனது மலம் முழுவதையும் பற்றற நீக்கினான்.
குறிப்புரை:
`இழிந்து, கொண்டு நின்றதாள்` என்க. ``விண்`` என்றது மேல்நிலையை. அது, `பரநிலை` எனப்படுதலின், அந்நிலைக் கண் நிற்கும் அவனது சத்தி `பராசத்தி` எனப் பெயர்பெற்று நிற்கும். அந் நிலையினின்றும் இறங்குதலாவது, உலகை நோக்குதல். அது முன்னை நிலையிற் கீழ்ப்பட்டதாகலின், ``தண் நின்ற`` என்றார். தண்மை - தாழ்வு, ``தண்பதத்தாற் றானே கெடும்`` (குறள். 548) என்பதிற்போல `மெய்யை வினைக்கீடாய்க் கொண்டு` என்க. மெய் - உண்மை நிலை. அஃது அறக்கருணையாய் நின்று விளக்குதலைச் செய்தல். அதனை மாற்றிக் கொள்ளுதலாவது, மறக் கருணையாய் நின்று மறைத்தலைச் செய்தல். சத்தியை, `தாள் - திருவடி` என்றல் மரபு.
உலகை நோக்காது இயற்கையில் நிற்கும் பராசத்தி தனது ஒரு சிறு கூற்றில் `ஆதி சத்தி` என நின்று உலகைத் தொழிற்படுத்தும். அந் நிலையில் அஃது உயிர்கட்குச் சிவத்தைக் காட்டாது உலகத்தையே காட்டி நிற்குமாதலின், `திரோதாயி அல்லது திரோதான சத்தி` என்று சொல்லப் படும். `மறைக்கும் ஆற்றல்` என்பது இதன் பொருள். இறைவனது சத்தி இவ்வாறு செய்தல், உயிர்களை அனாதியே பற்றியுள்ள ஆணவ மலத்தின் சத்தியை மெலிவித்தற் பொருட்டாம். அது மெலிவுறுதலே `மல பரிபாகம்` எனப்படும். மல பரிபாகம் வந்தவுடன் அத்திரோதான சத்தி தானே அருட்சத்தியாய் மாறிப் பதிந்து, உயிரின் அறிவில் ஒரு புத்துணர்ச்சியை உண்டாக்கும். இவ் வுணர்ச்சி, உயிருக்கு ஓர் அதிர்ச்சியாய்த் தோன்றும். அதுபற்றி அருட்சத்தி பதிதலை, `சத்தி நிபாதம்` என்பர். நிபாதம் - வீழ்ச்சி.
மலபரிபாகத்திற்கு முந்தின நிலை பாசத்தில் கட்டுண்டு கிடக்கும் நிலையாகலின் அது, `பெத்தம், பெந்தம், பந்தம், கட்டு` என் றெல்லாம் சொல்லப்படும். மல பரிபாகத்திற்குப் பிந்தின நிலை பாசத் தினின்றும் விடுபட்ட நிலையாகலின் அது, `முத்தி, மோட்சம், வீடு` என்றெல்லாம் சொல்லப்படும். பெத்த நிலையையே `முன்` என்றும், முத்தி நிலையையே `இன்று` என்றும் அருளிச்செய்தார். பெத்தநிலை திரோதான சத்திவழிப்பட்டே நிற்றலின் அதனை, ``தலைக்காவல்`` என்றார். ``முன்`` என்றதனை முதலில் வைத்து, ``வைத்து`` என்றதன் பின், ``நடாத்தி`` என்பது வருவித்து, `இன்று, காட்டி உருக்கி அறுத் தான்` என முடிக்க. அதிகாரம் வேறாயவழியும் முன்னைத் திருமந்திரத் தோடு தொடர்பு தோன்ற எழுவாயை அதனினின்றும் தோன்ற வைத்தார். களிம்பு உவமையாகுபெயர். இதனால், `ஆணவ மலம் செம்பிற் களிம்புபோல அனாதியே உயிரில் கலந்துள்ளது` என்பதும், அங்ஙனம் கலந்த கலப்பால், `உயிர் அனாதிபெத்த சித்துரு` என்பதும், `அதனை அறுத்தான்` என்றதனால், `சிவன் இயல்பாகவே மலம் இல்லாத அனாதிமுத்த சித்துரு` என்பதும், அவனது அருள் செம்பைக் களிம்பு நீக்கிப் பொன்னாக்குகின்ற இரசகுளிகை போல்வது என்பதும் பெறப்பட்டன. ஆனந்தக் கண் - ஆனந்தத்தைப் பயக்கும் கண்; அஃது அருட்கண். அதனை உணரச் செய்தலே வழங்கு தலாகலின், ``காட்டி`` என்றார். `முன், வைத்து நடாத்தி, இன்று, காட்டி, உருக்கி அறுத்தான்` என்றதனால், இது நாயனாரது அநுபவமேயாதல் பெறப்பட்டது.
``எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான்
மெய்யே உன் பொன்னடிகள் கண்டு இன்று வீடுற்றேன்``
என்றார் திருவாசகத்தும் (தி.8 சிவபுராணம். 31. 32). ``ஆய்`` என்றது, `ஆக` என்பதன் திரிபு.
இதனால், `உலகை நோக்காது நிற்கும் நிலையே இறைவற்கு உண்மை நிலை` என்பதும், உலகை நோக்கி நின்று செயல் புரியும் நிலை பொதுநிலை என்பதும், `பொதுநிலையில் நிற்பனவெல்லாம் மறைப்பு நிலையே` என்பதும், `அந்நிலை பலவற்றையும் அவனது சத்தி திரோதான சத்தியாய் நின்றே செய்யும்` என்பதும், `அச்செயல் களெல்லாம் செம்பில் உள்ள களிம்பைத் தேய்ப்பது போல உயிர் களைப் பற்றியுள்ள ஆணவ மலத்தைத் தேய்க்கும் செயல்களேயாகும்` என்பதும், `அம்மலம் தேய்வுற்றபொழுது அத்திரோதான சத்திதானே அருட்சத்தியாய் மாறி உயிரைப் பொதுநிலையினின்று நீக்கி, உண்மை நிலையை அடையச்செய்யும்` என்பதும், `இவையே இறைவன் என்றும் உயிர்கள்பொருட்டு இடையறாது செய்துவரும் செயல்` என்பதும் கூறப்பட்டன. படவே, `இறை, உயிர், தளை` என்னும் முப் பொருள்களின் இயல்பு பற்றிய ஆகமப்பொருள் பலவும் இவ்வொரு திருமந்திரத்தானே தொகுத்துக் கூறப்பட்டவாறு அறிந்துகொள்க.
பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:
తెలుగు / தெலுங்கு
ಕನ್ನಡ / கன்னடம்
മലയാളം / மலையாளம்
චිඞංකළමං / சிங்களம்
Malay / மலாய்
हिन्दी / இந்தி
संस्कृत / வடமொழி
German/ யேர்மன்
français / பிரஞ்சு
Burmese/ பர்மியம்
Assamese/ அசாமியம்
English / ஆங்கிலம்
4. ఉపదేశం
పరబ్రహ్మ పరమపదం నుంచి దిగి వచ్చి, భూమిలో అవతరించి, కర్మలకు ఆస్పదమైన మానవ శరీరాన్ని పొంది, తన్నాశ్రయించిన జీవాత్మలకు అండదండగా ఉన్నాడు. అందుకు జీవాత్మల మనస్సుల్లో జొరబడి, కఠిన హృదయాలను కరిగించి, ఉపమానం చెప్పలేని అద్భుత అనుగ్రహ ప్రవాహాన్ని సృష్టించాడు. మనోభ్రాంతులతో తల్లడిల్లుతున్న జీవాత్మల బంధపాశాలను తెంచి వేశాడు.
అనువాదం: డాక్టర్ గాలి గుణశేఖర్, తిరుపతి, 2023
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
प्रथम तंत्र
1. उपदेश
शरीर जैसा वस्त्र धारण कर परमात्मा देव लोक से नीचे आया
उसने अपने कृपापूर्ण शीतल पैरों को अनन्त काल से कर्म के लिए फैलाया,
मेरे नमित ह्रदय को द्रवित करते हुए उसने मुझमें निवास किया,
और मेरी आँखों को अतुल्य आनन्द से भर दिया जिससे मेरी सारी अपवित्रता
नष्ट हो गई |
- रूपान्तरकार शिशिर कुमार सिंह 1996
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
DIVINE INSTRUCTION
He Descended From Heaven and Filled Me With Grace
He came down from Heaven, clothed in body,
Karma to match, stretched forth His cool Feet of
Grace, form time immemorial
And lo! inside me He stood, melting my yielding heart;
And filled my eyes with peerless bliss, past all compare,
All impurity dispelled.
Translation: B. Natarajan (2000)
பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration
𑀢𑀫𑀺𑀵𑀺 / தமிழி
গ্রন্থ লিপি / கிரந்தம்
வட்டெழுத்து /
Reformed Script / சீர்மை எழுத்து
देवनागरी /
தேவநாகரி
ಕನ್ನಡ / கன்னடம்
తెలుగు / தெலுங்கு
සිංහල / சிங்களம்
മലയാളം / மலையாளம்
ภาษาไทย / சீயம்
မ္ရန္မာစာ / பர்மியம்
かたかな / யப்பான்
Chinese Pinyin / சீனம் பின்யின்
عربي / அரபி
International Phonetic Alphabets / ஞால ஒலி நெடுங்கணக்கு
विण्णिण्ड्रिऴिन्दु विऩैक्कीडाय् मॆय्गॊण्डु
तण्णिण्ड्र ताळैत् तलैक्कावल् मुऩ्वैत्तु
उण्णिण्ड्रुरुक्कियॊ रॊप्पिला आऩन्दक्
कण्णिण्ड्रु काट्टिक् कळिम्बऱुत् ताऩे
Open the Devanagari Section in a New Tab
ವಿಣ್ಣಿಂಡ್ರಿೞಿಂದು ವಿನೈಕ್ಕೀಡಾಯ್ ಮೆಯ್ಗೊಂಡು
ತಣ್ಣಿಂಡ್ರ ತಾಳೈತ್ ತಲೈಕ್ಕಾವಲ್ ಮುನ್ವೈತ್ತು
ಉಣ್ಣಿಂಡ್ರುರುಕ್ಕಿಯೊ ರೊಪ್ಪಿಲಾ ಆನಂದಕ್
ಕಣ್ಣಿಂಡ್ರು ಕಾಟ್ಟಿಕ್ ಕಳಿಂಬಱುತ್ ತಾನೇ
Open the Kannada Section in a New Tab
విణ్ణిండ్రిళిందు వినైక్కీడాయ్ మెయ్గొండు
తణ్ణిండ్ర తాళైత్ తలైక్కావల్ మున్వైత్తు
ఉణ్ణిండ్రురుక్కియొ రొప్పిలా ఆనందక్
కణ్ణిండ్రు కాట్టిక్ కళింబఱుత్ తానే
Open the Telugu Section in a New Tab
വിണ്ണിന് റിഴിന്തു വിനൈക്കീടായ് മെയ്കൊണ്ടു
തണ്ണിന്റ താളൈത് തലൈക്കാവല് മുന്വൈത്തു
ഉണ്ണിന് റുരുക്കിയൊ രൊപ്പിലാ ആനന്തക്
കണ്ണിന്റു കാട്ടിക് കളിംപറുത് താനേ
Open the Malayalam Section in a New Tab
วิณณิณ ริฬินถุ วิณายกกีดาย เมะยโกะณดุ
ถะณณิณระ ถาลายถ ถะลายกกาวะล มุณวายถถุ
อุณณิณ รุรุกกิโยะ โระปปิลา อาณะนถะก
กะณณิณรุ กาดดิก กะลิมปะรุถ ถาเณ
Open the Thai Section in a New Tab
ヴィニ・ニニ・ リリニ・トゥ ヴィニイク・キーターヤ・ メヤ・コニ・トゥ
タニ・ニニ・ラ ターリイタ・ タリイク・カーヴァリ・ ムニ・ヴイタ・トゥ
ウニ・ニニ・ ルルク・キヨ ロピ・ピラー アーナニ・タク・
カニ・ニニ・ル カータ・ティク・ カリミ・パルタ・ ターネー
Open the Japanese Section in a New Tab
finnindrilindu finaiggiday meygondu
dannindra dalaid dalaiggafal munfaiddu
unnindruruggiyo robbila anandag
gannindru gaddig galiMbarud dane
Open the Pinyin Section in a New Tab
ʋɪ˞ɳɳɪn̺ rɪ˞ɻɪn̪d̪ɨ ʋɪn̺ʌjcci˞:ɽɑ:ɪ̯ mɛ̝ɪ̯xo̞˞ɳɖɨ
t̪ʌ˞ɳɳɪn̺d̺ʳə t̪ɑ˞:ɭʼʌɪ̯t̪ t̪ʌlʌjccɑ:ʋʌl mʊn̺ʋʌɪ̯t̪t̪ɨ
ʷʊ˞ɳɳɪn̺ rʊɾʊkkʲɪɪ̯o̞ ro̞ppɪlɑ: ˀɑ:n̺ʌn̪d̪ʌk
kʌ˞ɳɳɪn̺d̺ʳɨ kɑ˞:ʈʈɪk kʌ˞ɭʼɪmbʌɾɨt̪ t̪ɑ:n̺e
Open the IPA Section in a New Tab
viṇṇiṉ ṟiḻintu viṉaikkīṭāy meykoṇṭu
taṇṇiṉṟa tāḷait talaikkāval muṉvaittu
uṇṇiṉ ṟurukkiyo roppilā āṉantak
kaṇṇiṉṟu kāṭṭik kaḷimpaṟut tāṉē
Open the Diacritic Section in a New Tab
выннын рылзынтю вынaыккитаай мэйконтю
тaннынрa таалaыт тaлaыккaвaл мюнвaыттю
юннын рюрюккыйо роппылаа аанaнтaк
каннынрю кaттык калымпaрют таанэa
Open the Russian Section in a New Tab
wi'n'nin rishi:nthu winäkkihdahj mejko'ndu
tha'n'ninra thah'läth thaläkkahwal munwäththu
u'n'nin ru'rukkijo 'roppilah ahna:nthak
ka'n'ninru kahddik ka'limparuth thahneh
Open the German Section in a New Tab
vi'n'nin 'rizhi:nthu vinaikkeedaay meyko'ndu
tha'n'nin'ra thaa'laith thalaikkaaval munvaiththu
u'n'nin 'rurukkiyo roppilaa aana:nthak
ka'n'nin'ru kaaddik ka'limpa'ruth thaanae
Open the English Section in a New Tab